இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் என பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2018-12-19 22:45 GMT
லண்டன்,

இங்கிலாந்தின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதி ஆடம் தாமஸ், கிளாடியா பட்டாடஸ். நாஜி ஆதரவாளர்களான இவர்கள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அடால்ப் ஹிட்லர் என பெயர் சூட்டினர்.

இதுபற்றிய தகவல் பரவலாக பரவியதை அடுத்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என கூறி ஆடம் தாமஸ் மற்றும் கிளாடியாவை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தாமசுக்கு 6½ ஆண்டுகளும், கிளாடியாவுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்