ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-01-09 05:36 GMT
சிட்னி

ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின்  தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு  தூதரகம், துணை தூதரகங்களுக்கு இன்று வந்த  மர்ம பார்சலால் பரபரப்பு  ஏற்பட்டது.  தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பார்சல்களை அனுப்பி உள்ளனர். 

இதை தொடர்ந்து மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள்  இங்கு முகாமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்