நெதர்லாந்தில் டிராம் வண்டியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் சாவு

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் 24 ஆக்டோபெர்பிலின் என்ற பகுதியில் நேற்று டிராம் வண்டியில் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

Update: 2019-03-18 22:00 GMT
ஆம்ஸ்ட்ராம்,

டிராம் வண்டியில்  ஏறிய மர்மநபர் ஒருவர் திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்