ஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.

Update: 2019-04-11 23:45 GMT

இஸ்லாமாபாத், 

தெரசா மே, மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானும் இதை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தகவல்துறை மந்திரி பவத் சவுத்ரி கூறியதாவது:–

பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளிடம் இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம். மேலும், லாகூர் அருங்காட்சியகத்துக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை அருங்காட்சியகத்துக்கே இங்கிலாந்து அரசு திருப்பித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்