ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.

Update: 2019-04-15 22:30 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகர் மெக்டர்லாமில், ஒரு வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அங்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். அது வெடிகுண்டு என்பதை அறியாத சிறுவர்கள் அதை வைத்து விளையாடினர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் சிறுவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 15 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்