பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது

Update: 2019-05-15 10:43 GMT
பப்புவா நியூ கினியா நாட்டின் கோகோபோ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதை தொடர்ந்து,  1000 கிலோ மீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்