மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

Update: 2019-05-21 23:00 GMT

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்