சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

சீனாவின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது.

Update: 2019-05-24 23:45 GMT

பீஜிங், 

டீய்பான்  ஆற்றில் நேற்று முன்தினம் மாலை 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த படகு திடீரென கவிழ்ந்தது. 

இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் 10 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே சமயம் இந்த கோர விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்