அமெரிக்கா: 20 அடி உயரம் பறந்து மரத்தில் மோதிய கார் - 3 இந்திய பெண்கள் பலி

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் 3 இந்திய பெண்கள் உயிரிழந்தனர்.

Update: 2024-04-27 11:40 GMT

வாஷிங்டன்,

இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சட் பகுதியை சேர்ந்த பெண்கள் ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் கிரீன்வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 3 பெண்களும் நேற்று ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். காரை ஆண் நபர் வேகமாக ஓட்டியுள்ளார். சாண்டோன் பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி 4 வழிசாலையை கடந்து 20 அடி உயரத்திற்கு பறந்து சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென் ஆகிய 3 இந்திய பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்