எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இங்கிலாந்து நாட்டுக்காரர் சாவு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராபின் ஹய்நெஸ் பி‌ஷர் (வயது 44) என்பவர் உள்பட 6 பேர் குழுவினர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.

Update: 2019-05-25 23:15 GMT

காத்மாண்டு, 

ராபின் ஹய்நெஸ்  பி‌ஷர் 8,600 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென நேற்று காலை 8.30 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த வசந்த காலத்தில் இதுவரை 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பல்வேறு மலைகளில் ஏறும்போது பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் எவரெஸ்ட் சிகரத்தில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்