நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.