தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் பெண் எம்.பியை கன்னத்தில் அறைந்த ஆண் எம்பி
தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் ஆண் எம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷித் காசிம் என்ற அந்த எம்.பி, தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பட்ஜெட் கமிட்டியை சேர்ந்த பதுமா கெடி என்ற பெண் எம்பியை அறைந்ததாக கூறப்படுகிறது. கெடி, வாயில் ரத்தத்துடன் அழுவது போன்ற புகைப்படம் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
வட கிழக்கு கென்யாவில் உள்ள வாஜிர் கிழக்கு பகுதியின் எம்.பியான காசிம், நாடாளுமன்ற கார் நிறுத்தத்தில் வைத்து கெடியுடன் தனது தொகுதிக்கு பணம் தராதது குறித்து சண்டையிட்டு பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை ஆண் எம்.பிக்கள் கேலி செய்ததால் அவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Wajir Women Rep Fatuma Gedi allegedly assaulted inside parliament buildings by Rashid Kassim Mp Wajir East.#ArrestHonKassimpic.twitter.com/zSxpO1nzjM
— Hon Lee Makwiny (@leemakwiny) June 13, 2019