தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்,
திபெத்திய புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14 ஆவது புத்த மத தலைவராவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15 ஆவது புத்த மத தலைவரை அம்மதத்தினர் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.
திபெத் துணை மந்திரி அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் இது பற்றி கூறும் போது, ‘‘தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது’’ என்றார்.