அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலியானார்.

Update: 2019-08-21 13:22 GMT
வாஷிங்டன், 

இந்தியாவை சேர்ந்த சுமேத் மன்னார் (27) அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர்  அங்குள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுகிழமை சென்றுள்ளார். இந்த ஏரியின் ஜம்பிங் ராக் என்ற இடத்தில் இருந்து குதித்தார்.

ஏரியில் குதித்த சில நிமிடங்கள் ஆன பிறகும் அவர் மேற்பரப்புக்கு வரவில்லை. இதையடுத்து, அவர்  ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் கருதினர். எனினும் அவரது உடலை தேடும் பணியில் தீவிரமாக இருந்தனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவருடைய உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அவர் மூழ்கி இறந்ததற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்