இங்கிலாந்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.

Update: 2019-08-31 06:15 GMT
லண்டன்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டரங்கில்   நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

 லண்டனில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.


மேம்படுத்தப்பட்ட மின்சார உள்கட்டமைப்பு மற்றும் மின் விநியோகம், மின்சார கேபிள்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மின்சார கேபிள்கள், சாதனங்களைப் பொருத்துதல், பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக, லண்டன் நகரில் உள்ள 200 ஆண்டு பழமையான அத்தீனியம் சங்கத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். அவரை வரவேற்ற தமிழ் மற்றும் இந்திய வம்சாவளியினர் தென்னிந்திய விருந்து அளித்து கவுரவித்தனர். கவுரவமிக்க அத்தீனியம் சங்கத்தைச் சேர்ந்த 52 பேர் இதுவரை பல்வேறு துறைகளில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.

லண்டன் ஆம்புலனஸ் சர்வீசையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

மேலும் செய்திகள்