அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

Update: 2019-09-17 22:22 GMT

* அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றியவர்கள் தங்கியிருந்த விடுதியில், விஷவாயு கசிந்து கட்டிடம் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

* தாய்லாந்தில் கோ சாங் தீவில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கன மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 33 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள தபோலி நகரில் ஆட்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

மேலும் செய்திகள்