பிரான்ஸ்: போலீஸ் தலைமை அலுவலகத்தில் 4 அதிகாரிகள் கத்தியால் குத்திக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் 4 அதிகாரிகள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

Update: 2019-10-03 13:26 GMT
பாரிஸ்,

பிரான்சு தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் போலீஸ் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நிர்வாக பணியில்  பணியாற்றி வந்த நபர் ஒருவர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அதிகாரிகளை தாக்கினார்.  இதில் படுகாயம் அடைந்த 4 அதிகாரிகள் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

துரிதமாக செயல்பட்ட போலீசார், கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் பற்றி அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட தகவலின் படி, பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்