இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-10-10 11:16 GMT
ஸ்டாக்ஹோம்

சர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது.  இன்று  2018, 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்