அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த இந்தியர்

அமெரிக்காவில் உள்ள ரோஸ்வில்லி, பிளேசர் கவுண்டி நகரில் ஒரு குடியிருப்பில் வசித்துவந்தவர் சங்கர் நாகப்பா ஹாங்குட் (வயது 53). இந்தியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார்.

Update: 2019-10-16 23:00 GMT
சான்பிரான்சிஸ்கோ, 

சங்கர் நாகப்பா ஹாங்குட் நேற்று ஒரு காரில் பல இடங்களில் சுற்றிவிட்டு இறுதியாக மவுண்ட் சாஷ்டா போலீஸ் நிலையம் சென்று, தனது வீட்டில் 4 பேரை கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார். அவர் தனது காரிலேயே ஒரு உடலையும் எடுத்துவந்தார்.

போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இறந்தவர்கள் யார்? எதற்காக அவர்களை கொலை செய்தார்? என்ற தகவல்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அவரது குடும்பத்தினர், 2 பேர் பெரியவர்கள், 2 பேர் சிறுவர்கள் என்றும் கூறினர். இதுபோன்ற கொலையை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். போலீசார் சங்கர் நாகப்பா ஹாங்குட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்