லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

Update: 2019-10-17 23:00 GMT
லண்டன், 

இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த மார்ச் மாதம் அவரை ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர். லண்டன் ஜெயிலில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் முடிந்தநிலையில், காணொலி காட்சி மூலம் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 11-ந் தேதிவரை அவரது காவலை நீட்டித்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி நினா டெம்பியா உத்தரவிட்டார். நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு மே 11-ந் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்