நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
நேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
காத்மாண்டு,
நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.