நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

நேபாளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-12-14 02:56 GMT
காத்மாண்டு,

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்