கொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-01-31 01:14 GMT
பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை சீனாவில் 9,692 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில்  விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்