மங்கோலியாவில் பரிதாபம்: வீட்டில் தீப்பிடித்து 2 குழந்தைகள் பலி

மங்கோலியாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2020-02-21 21:09 GMT
உலான் பதோர்,

மங்கோலியாவின் பயான்கோன்கோர் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி 4 மற்றும் 1 வயதான தங்களது 2 மகள்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு வெளியே சென்றனர். அவர்கள் வெளியே சென்ற சற்று நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பச்சிளம் குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் செய்திகள்