உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-04-02 01:07 GMT
பாரீஸ், 

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 5,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  47,194 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது.  அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.  சுமார் 1,94  பேர் ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

  இத்தாலியில் மட்டும்  13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை   110,574 கடந்துள்ளது.  ஸ்பெயின் நாட்டில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,102- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்