அமெரிக்க மக்களுக்கு அடுத்த இருவாரங்கள் மோசமானதாக இருக்கும்; டிரம்ப்

அமெரிக்க மக்களுக்கு அடுத்த இருவாரங்கள் மிக மோசமானதாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-05 05:52 GMT
வாஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 311,635- பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  8,454 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில்,  அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிக, மிக மோசமானதாக இருக்கப் போகிறது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடலாம். இதுநாள் வரை அதுபோன்ற சூழலை நாடு பார்த்திராத ஒன்றாக இருக்கும்” என்றார். 

மேலும் செய்திகள்