நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்வு
நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது.
காத்மாண்டு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேபாளத்தில் ஊரடங்கு ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 30- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 49 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.