நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்வு

நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-22 04:11 GMT
காத்மாண்டு, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேபாளத்தில் ஊரடங்கு ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  நேபாளத்தில்  இன்று ஒரே நாளில் மேலும் 30- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து 49 பேர் குணமடைந்துள்ள நிலையில்  3 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்