வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-05-25 22:45 GMT
* வங்காளதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,585 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

* இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் போலீசார் ரகசிய சோதனையில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 60 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

* ஈரானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ நெருங்கி வருகிறது.

மேலும் செய்திகள்