இறந்த பிறகு என்ன நடக்கும்? மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் குறித்து விளக்கும் ட்ரூ பி

இறந்த பிறகு என்ன நடக்கும்? இளைஞர்கள் நிறைந்த ஒரு உலகத்தைக் கண்டதாக மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவத்தை ஒருவர் பகிர்ந்து உள்ளார்.

Update: 2020-05-26 12:59 GMT
லண்டன்

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் மிக முன்னேறிய உலகில் நாம் வாழ்ந்தாலும், மரணத்தின் நிகழ்வு தொடர்ந்து அனைவரையும் ஒரு குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆன்மீகவாதிகள்  மனிதன் கடைசி மூச்சுக்குப் பிறகு தொடர்ந்து வேறு உலகில் வாழ்வதாககூறுகின்றனர், ஆனால் மூளை செயல்படுவதை நிறுத்திய பின் மனித உணர்வு முடிவுக்கு வரும் என்று மருத்துவ நிபுணர்கள் உறுதியளிக்கிறார்கள்.

மரணத்திற்குப் பின் வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கமாக மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம்(என்.டி.இ) குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த சான்றுகளை முன்வைக்கிறார்கள். இதுபோன்ற ஒரு சான்று ஆன்லைனில் வைரலாகி உள்ளது. இந்த சான்றிதழை மரணத்திற்கு அருகில் அனுபவம் ஆராய்ச்சி அறக்கட்டளை இணையதளத்தில் ட்ரூ பி என்ற நபர் பகிர்ந்துள்ளார்.

ட்ரூ பி  தனது மோட்டார் சைக்கிளின் மீது  ஒரு கார்  மோதியதால் மரணத்தின் விளிம்புக்கு சென்றார். விபத்தைத் தொடர்ந்து அவர் சில காலம் மருத்துவ ரீதியாக இறந்தார், இந்த தருணங்களில்தான் ட்ரூ மனதைக் கவரும் சில காட்சிகளைக் கண்டார்.

இந்த தருணங்களில் தான் ஒரு பிரகாசமான கூடாரத்தைக் கண்டதாக ட்ரூ கூறி உள்ளார், மேலும் 30 வயதிற்குட்பட்ட பல இளைஞர்களைக் கண்டதாகவும் கூறினார். மேலும் இந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியானவர்கள் என்றும், அந்த மந்திர உலகத்திலிருந்து திரும்பி வர தனக்கு மனநிலைஇல்லை என்றும் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகிறார்..,

நான் ஒரு பிரம்மாண்டமான, பிரகாசமான-வெள்ளை கூடாரத்தின் மடிப்புகளில் நடந்து செல்லும்போது மிகவும் அமைதியானதாக உணர்ந்தேன். கூடாரத்தின் உள்ளே, வெளிச்சமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தது. மனிதர்களுடன் இணக்கமாக அங்கிருந்த ஒவ்வொரு வகையான விலங்குகளும் நடந்து கொண்டிருந்தன. மனிதர்கள் அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் மகிழ்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருந்தார்கள். இது நான் இதற்கு முன்பு  பார்த்திராத அனுபவத்திருத இடமாகவும் இருந்து,  நான் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை என்றும் ட்ரூ இணையதளத்தில் கூறி உள்ளார்.

மேலும் ட்ரூ மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவத்தின் போது தனது தாத்தாவை பார்த்ததாகக் கூறினார். தனது என்.டி.இ அனுபவம்  முற்றிலும் இனிமையானது என்பதை அவர் தெளிவுபடுத்தினார், மேலும் இந்த தருணங்களில் அவர் ஒரு மாய ஒளியால் சூழப்பட்டதாக கூறினார்.

மரணத்திற்குப் பின் வாழ்க்கைக்கு ஆதாரம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, மனித மூளை உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளின் போது உயிர்வாழும் தந்திரத்தை கடைப்பிடிக்கும், மேலும் இது வித்தியாசமான காட்சி பிரமைகளை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர். 

மேலும் செய்திகள்