மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஓக்சாகா,
மெக்சிகோ நாட்டின் ஓக்சாகா நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால், கட்டிடங்கள் குலுங்கின. நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சாலைகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட காயம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் உடனடியாக வரவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.