பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-16 08:14 GMT
பிரேசிலியா,

பிரேசில் அரசாங்கத்தின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,169,386 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 713 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,460 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் பேபியோ பாரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் இதுவரை 45,99,446 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்