இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது
இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது செய்யபட்டு உள்ளனர்.
ரோம்
இத்தாலி நாட்டின் விமானப்படையில் பணியாற்றும் பெண் விமானி கியூலியா என்பவர் சக ஆண் விமானிகளுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரைத் தூக்கிச் சென்ற ஆண் விமானிகள், கியூலியாவை கடுமையாகத் துன்புறுத்தினர்.
பின்னர் அவரை அருகிலிருந்த நினைவுக் கல்லின் மீது தலையை மோதினர். தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் குளத்தில் கியூலியாவை தூக்கி வீசினர்.இதுகுறித்த புகாரின் பேரில் 8 ஆண் விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லத்தீனாவில் உள்ள விமானப்படையின் 70 வது பிரிவைச் சேர்ந்த எட்டு சார்ஜென்ட்கள் டிசம்பர் 11 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.