வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் (கேபிடல்) தாக்கப்பட்டதற்கு டிரம்ப் தான் காரணம் என குற்றம்சாட்டி அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2021-01-13 22:41 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் மீதான விவாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடைபெற்றது. இதில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. 

முன்னதாக, டிரம்ப் விடுத்த அறிக்கையில்ஆதரவாளர்கள் எவரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என கோரிக்கை விடுத்தார். மேலும், சட்டத்தை மீறு வகையில் நடந்து கொள்ளக் கூடாது, கலகம் ஏற்படுத்தக்கூடாது எனவும் தனது அறிக்கையில் டிரம்ப் கோரினார்.

மேலும் செய்திகள்