அமீரகத்தில், கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி

அமீரகத்தில், கொரோனாவுக்கு ஒரேநாளில் 14 பேர் பலி.

Update: 2021-02-18 02:10 GMT

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 502 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 14 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,055 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 593 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சமீப நாட்களாக குறைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்