ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 12,953- பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,953- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 12,953- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 41,51,984 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,623 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 82,876 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 17,484 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போதுவரை 36,97,433 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.