இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்

Update: 2021-02-27 23:26 GMT
லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த  24 மணி நேரத்தில் 7,434- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 705- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  2,846,208- ஆக உள்ளது. இங்கிலாந்து நாட்டில் இதுவரை 19.6- மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்