கொரோனா பரவல் அதிகரிப்பு: பாகிஸ்தானில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

Update: 2021-03-29 00:43 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில்  கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,767 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 54 ஆயிரத்து 592 ஆக உள்ளது. 

அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14,215 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31-வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் 4 ஆயிரத்திற்கும் மேல் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகிறது. 

இதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் செய்திகள்