ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்க் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்,
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து15 ஆயிரத்து 445- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 319- பேரும் இதுவரை 66 ஆயிரத்து 327- பேரும் உயிரிழந்து இருப்பதாக ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70 சதவீதம் வீரியமிக்கது என அந்நாட்டு சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.