பாகிஸ்தானில் சாலை விபத்து: 10 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2021-06-04 12:58 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.  15 பேர் காயமடைந்து உள்ளனர்.  முதல் விபத்து தண்டோ மஸ்தி கான் பகுதியில் ஏற்பட்டு உள்ளது.

இதில், கார் ஒன்றின் மீது பயணிகள் பேருந்து மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  15 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் பெரோஸ்பூர் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் மீது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 4 பேரும் உயிரிழந்து விட்டனர்.  அவர்கள் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்