ஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல்: 3 பேர் பலி

கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-06-25 23:22 GMT
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கத்திக் குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3-பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 சந்தேக நபரை கைது துப்பாக்கிச்சூடு நடத்தி  போலீசர் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கபட்டவர் எனவும் சமீபத்தில் இதற்காக சிகிச்சை பெற்றிருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

கத்தி குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்