பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்-லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியானார்கள்.

Update: 2021-07-19 10:55 GMT
Image courtesy : DawnNewsTv
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டிரக்குடன் பயணிகள் பஸ் மோதியதில் 30 பேர் பலியானார்கள்  மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்  பயணிகள் பஸ்  ஒன்று சியால்கோட்டிலிருந்து ராஜன்பூருக்கு சென்று கொண்டிருந்தது.  தேரா காசி கானில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பஸ் எதிர்பாரத விதமாக எதிரே வந்த ஒரு டிரக்  மீது பயணிகள் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியானார்கள். 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்