பாகிஸ்தானில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 17 பேர் மாயம்

பாகிஸ்தானில் ரகாகன் அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2021-07-22 11:25 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பாஜாயுர் மாவட்டத்தில் உள்ள ரகாகன் அணையில் 18 பேருடன் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக மீட்புக்குழுவினர் சென்ற 2 படகுகளும் மூழ்கின. இதன் பின்னர் அங்கு விரைந்த மற்றொரு மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். 17 பேர் மாயமானார்கள்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகம் பேர் பயணித்தால் பாரம் தாங்காமல் சுற்றுலாப் படகு மூழ்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்