ஆப்கானிஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்; தலிபான்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.

Update: 2021-07-24 18:45 GMT


காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர்.  இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.  அவர்கள் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

அவர்களை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை ஆப்கானிஸ்தான் அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.  வன்முறையை கட்டுப்படுத்தவும், தலிபான் படையினரின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நாட்டின் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும், இந்த ஊரடங்கானது, ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 3 மாகாணங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில், தலிபான் பயங்கரவாதிகளின் இரவு நேர நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஆப்கானிஸ்தானிய அரசு தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்