தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2021-08-26 01:58 GMT



தர் எஸ் சலாம்,


தான்சானியா நாட்டின் வர்த்தக தலைநகர் தர் எஸ் சலாம் நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் மற்றும் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து மர்ம நபரும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.  இதனை அதிபர் ஹசன் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்