சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்
சோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஹிரன்,
சோமாலியா நாட்டின் ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தின் உள்ளே அல்-சபாப் பயங்கரவாதிகள் நில கண்ணிவெடிகளை புதைத்து வைத்து உள்ளனர்.
இந்த கண்ணிவெடிகள் பின்னர் வெடித்து உள்ளன. இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.