சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்

சோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2021-09-20 00:56 GMT
ஹிரன்,

சோமாலியா நாட்டின் ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தின் உள்ளே அல்-சபாப் பயங்கரவாதிகள் நில கண்ணிவெடிகளை புதைத்து வைத்து உள்ளனர்.

இந்த கண்ணிவெடிகள் பின்னர் வெடித்து உள்ளன.  இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்து உள்ளது.  இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

மேலும் செய்திகள்