பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-10-17 10:27 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தில் முசாபர்கார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது.  இதில் அந்த வீட்டில் இருந்த 7 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஒருவரும் உயிர் தப்பவில்லை.  இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்