பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
லாகூர்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கித்-பல்ஜிஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளை பிரிக்கும் சியாச்சின் மலைத்தொடர் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சியாச்சின் மலைத்தொடர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று பறந்து சென்றுகொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ராணுவத்தின் 2 விமானிகள் பயணித்தனர்.
சியாச்சின் மலைத்தொடர் பகுதியில் ஹெலிகாப்டர் பயணித்தபோது திடீரென கிழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த பாகிஸ்தான் ராணுவத்தின் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர்.