ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது: உலக சுகாதார அமைப்பு
ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவா
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பல நாடுகளும் அச்சத்திலேயே உள்ளது
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும்போது, "முந்தைய கொரோனா வகைகளை விட ஓமைக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன, அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. ஒமைக்ரான் குறித்து மேலும் ஆரய்ச்சி தேவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.