பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.

Update: 2022-01-22 19:10 GMT
பெஷாவர்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்  உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கான தங்கும் இடமாக அமைந்து இருந்த அந்த முகாமில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்