ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

Update: 2022-01-29 23:00 GMT
புதுடெல்லி, 

பொருளாதார சரிவு மற்றும் வறுமையில் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை போக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று 3 டன் அளவிலான உயிர் காக்கும் மருத்துவ பொருள்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அந்த மருத்துவ பொருட்கள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்