இலங்கை போராட்டத்தில் இணைந்த வெளிநாட்டினர்... மக்களுடன் நடனமாடி அரசுக்கு எதிர்ப்பு
இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் வெளிநாட்டினர் மக்களுடன் நடனமாடி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
மேலும், தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டங்கள், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், வெளிநாட்டினர் இரண்டு பேர், மலையக மக்களுடன் இணைந்து நடனமாடி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.